பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

ருள் பிரியும் நேரத்திலே மதுரம் மைத்ரேயியுடன் பஸ் ஏறிவிடுகிறாள். புதிய நாள்; புதிய ஞாயிறின் உதயம். சென்னை யில் அது எந்தப் பகுதி.என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை. ஆனால் தெரு முழுவதும் அகன்ற தோட்டங்களிடையே வண்ணக் கனவுகள்போல் இல்லங்கள் எழும்பியிருக்கின்றன. சாலையில் நடந்து, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்புப் பலகை பொருந்திய ஒரு வாயிலின் பக்கம் வந்து நிற்கிறாள். அங்கு ஒரு பக்கம் ‘லோகநாயகி’ என்று சலவைக் கல்லில் பொறித்த பெயர்ப் பலகை சுற்றுச்சுவர் தூணில் பதிந்திருக்கிறது.

அவர்கள் கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்வதற்குமுன், நாய் குலைக்கும் ஒலி கேட்கிறது. ஆளுயுரம் எழும்பிக் குதிக்கும் அல்சேஷியன் நாய்; அடித் தொண்டையிலிருந்து உறுமிக்கொண்டு, ‘உள்ளே அடிவைத் தால் ஒரு பவுண்டு சதைக்குக் குறையாமல் கவ்வக்கூடிய நான் குதறிவிடுவேன்!’ என்று அறிவித்து வரவேற்பளிக்கிறது.

‘இதென்ன கன்றாவி? நாயெப்ப வந்தது? இதைக் கட்டி விரட்டியடிக்கிறாளே? என்று மனசுக்குள் கடிந்து கொண்டாலும், மதுரம் நாசுக்காக.

“ஸார், ஸார்!” என்று குரல் கொடுக்கிறாள். அப்போது ஐந்தரையடி உயரத்தில் ரோமக் காடான சிவந்த திறந்த மார்பைக் காட்டிக்கொண்டு இடுப்பில் மட்டும் பைஜாமா அணிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் “ஹே ஸீஸர்...! ஸீஸர்!” என்று குரல் கொடுத்துக் கொண்டு வருகிறான். நாயின் கழுத்துச் சங்கிலியைப் பற்றிக் கொள்கிறான்.

“நான் தாண்டா சேது. பயந்துபோனேன். நல்லவேளை, புடிச்சிண்டிருக்கயா?”

“ஒண்ணும் பண்ணாது மாமி. நீங்க பாட்டுக்குப் போங்கோ!” என்று மதுரத்தின் குரலுக்கு அவன் மறுமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/91&oldid=1123724" இலிருந்து மீள்விக்கப்பட்டது