பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

லியோ டால்ஸ்டாயின்

உடன் பிறப்புக்கள் ஐவரிலும் மூத்தவர் பெயர் நிக்கோலஸ்; இவர், அறிவு நுட்பமும், எந்தப் பிரச்னையை அணுகுவதிலும் ஆழ்ந்த திட்டமும் சிந்தனையும் உடையவர். அதனால் நன்மை எது தீமை எது என்பதை அறியும் திறனுடையவராக இருந்தார். அவருக்கு கற்பனைச் சக்தி அதிகம்! தனது தம்பியர் நால்வருக்கும் புதிய புதிய புத்திக் கூர்மைகளை வழங்கும் கதைகளை அவர் சொல்லுவார். அதைக் கேட்ட உடன் பிறப்புக்கள் அனைவரும் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள்.

மூத்த அண்ணன் கூறும் கதைகளைப் பற்றி டால்ஸ்டாய் பின்னர், தனது கருத்தைக் கூறும் போது, எனக்கு வயது ஐந்து. அடுத்த அண்ணன் டிமெட்ரிக்கு ஏழுவயது; “அப்போது பெரிய அண்ணன் நிக்கோலஸ் தனக்கு ஒரு ரகசியம் தெரியும் என்றும், அந்த ரகசியம் யாருக்குத் தெரிந்தாலும், நோயோ, துன்பமோ, துயரமோ, சினமோ, பேராசையோ அவர்கள் அருகில் கூட அண்டாது என்றும், மக்கள் இடையே எறும்புகளைப் போன்ற சகோதர உணர்வு உருவாகிவிடும்” என்பார்! ‘எறும்பு’ என்று அவர் கூறிய சொல்லை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது எங்களுக்கு எறும்பு ஊர்ந்து செல்லும் பாதைகளும், வரிசை அழகுகளும் அவற்றின் துவாரங்களும் நினைவுக்கு வந்து சுறு சுறுப்பாகி, எங்கள்து அடுத்த பணிகளிலே இறங்கி விடுவோம்! அந்த சொல் அவ்வாறு எங்களை ஈர்த்துவிடும்.

அதே வேளையில், சில தினங்களில் ‘எறும்புகளின் சகோதர பாசம்’ என்ற ஆட்டம் ஒன்றை ஆடுவோம்.”

எறும்பு விளையாட்டு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? இதோ டால்ஸ்டாயே அதற்கு விளக்கம் கூறுகிறார் கேளுங்கள்: