பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

லியோ டால்ஸ்டாயின்

இரண்டாவது நிபந்தனை என்னவென்றால்: “ஒரு மெல்லிய கோட்டின் மேல் தடுமாறாமல் நடக்க வேண்டும்.

ஓராண்டுவரை உயிரோடுள்ள முயலையோ; செத்த முயலையோ பார்க்கக் கூடாது என்பது மூன்றாவது விதி. இந்த நிபந்தனைதான் எளிமையானது. ஆனால், உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அவரே இது பற்றி மேலும் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள்:

எறும்புகளின் சகோதர உணர்ச்சி என்ற ஆதரிசம், இப்பொழுதும் என் மனத்தில் இருக்கின்றது. வேற்றுமை இதுதான். நாற்காலிகளுக்கு அடியில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டிருப்பதோடு இந்த ஆதரிசம் இப்போது நின்று விடவில்லை. இந்த நீல வான வரம்புக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கும். மக்கள் அனைவரையும் கொள்வேதே இப்போதைய எனது ஆதரிசம் ஆனது.

டால்ஸ்டாயின் மூத்த தமையனைப் பற்றி இதுவரை கூறிய லியோடால்ஸ்டாய், இப்போது தன்னுடன் பிறந்த மற்ற உடன் பிறப்புக்களைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:

“நிக்கோலசிடம் எனக்கு மரியாதை இருந்தது. டிமெட்ரியை என் நண்பராய் எண்ணினேன். ஆனால் செர்ஜியஸ் என்ற அண்ணனை நான் பக்தியுடன் பூஜித்தேன். எதற்காக?

“அவனைப் போல நான் பேச வேண்டும்; ‘நா’, சாதுர்யம் இருக்க வேண்டும், நடத்தையிலும் அவனைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவனிடம் எனக்கு அவ்வளவு அதிக பற்றுதல் இருந்தது.