பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

லியோ டால்ஸ்டாயின்

தனது வீட்டிலேயே எல்லாவிதமான ஒழுங்கீனங்களையும் அவர் அனுபவித்து வந்ததால், கல்லூரிக் கழகத்துக்குப் போக மாட்டார். அப்படிப் போனாலும் வகுப்பில் சரியாகப் பொறுமையாக உட்காரமாட்டார், உட்கார்ந்தாலும் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனமாகப் பின்பற்றமாட்டார், அடிக்கடி ஆசிரியருக்குத் தெரியாமல், கேட்காமல் திடீரென வெளியே ஓடிவிடுவார்.

இவர், இவ்வாறு செய்வதைக் கண்ட கல்லூரி நிர்வாகம், டால்ஸ்டாயைக் கல்லூரியிலேயே பூட்டிச்சிறை வைத்தார்கள். அப்படியும் அவர் திருந்தியபாடில்லை.

கல்லூரிக்கே சரியாக வராத டால்ஸ்டாயிக்கு பரீட்சையில் எப்படித் தேர்வு எண் கிடைக்கும்? அதனால், ஒவ்வொரு தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே அவர் பெற்று வந்தார். அதேநேரத்தில் அவருக்கு விருப்பமான பாடவிஷயம் என்றால் மிகவும் ஆழ்ந்து படிப்பார்! அதில் அக்கறையும் செலுத்துவார்.

எந்த ஒரு பிரச்னையிலும் அவருக்குத் தெளிவான அறிவும், கூர்மையான பற்றும் இல்லாமல் எதிலும் வௌவால் புத்தியோடு சஞ்சலப்படுவார். டால்ஸ்டாய் இளமைப் பருவம் நன்றாக இருந்தது. அதற்குக் காரணம் பெற்றோர்களது முழுப் பாதுகாப்பும் அக்கறையுள்ள கவனமுமே. ஆனால், தாய் தந்தையாரை இழந்து, உயிருக்கு உயிராகப் பற்றுதலோடு பாதுகாத்த அத்தையையும் இழந்து, யாரோ ஒரு தொலைதூர உறவுக்காரி, அவர் குடும்பத்துள் பேய் புகுந்தது போல் நுழைந்ததால், டால்ஸ்டாய் சஞ்சல புத்தியோடு மட்டுமல்லாமல் தீய பழக்க வழக்கங்களின் பிறப்பிடமாகவே திகழ்ந்தார்.

அதனால் அவரது மாணவர் பருவம் அமைதியே இல்லாத கானல் நீரானது. என்றாலும், மற்றவர்களுக்கு நன்மை செய்ய