பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

லியோ டால்ஸ்டாயின்

2. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும்!

3. படிக்கும் பாடத்தில் மறதி ஏற்பட்டால் புத்தகத்தைப் புரட்டக் கூடாது; படித்ததையே நினைவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.

4. மூளையை சுறுசுறுப்பாக இயக்க, அதற்கு நாம் நிறைய வேலைகளைத் தரவேண்டும்.

5. எந்தப் பாடத்தையும் உரத்துப் படிக்க வேண்டும். காலத்தோடு தூக்கத்திற்குச் செல்லவேண்டும்.

6. மற்றவர்கள் இடையூறுகள் நீ படிக்கும் போது ஏற்பட்டால், அல்லது இருந்தால், அவர்களிடம் அதைச் சொல்ல வெட்கப்படாதே.

7. முதலில் ஜாடை மாடையாகக் கூறு! அதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களிடம் பணிவாக மன்னிப்புக் கேட்டுக் கொள். தெளிவாகவே அவர்களிடம் சொல்லிவிடு.

8. சிறு பிராயத்துச் சிந்தனைப் பழக்கம்; மாணவப் பருவத்திலும் தொடர்ந்து நீடிக்கும் பழக்கமாக இருக்க வேண்டும்.

9. என் நாட்டு மக்களும், உலகமும் என்னை உயர்ந்தவன் என்று போற்றும்படி நல்ல பணிகளைச் செய்யவேண்டும். அதற்குரிய சிந்தனைகள் மாணவப் பருவத்திலேயே தோன்ற வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளையே மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.

10. உலக மக்களுக்கு நன்மை விளைவிக்கும் அல்லது வளம் உருவாக்கும் ஒரு நல்லவழியை விரும்பும் எந்தத் துறையிலாவது மாணவர்கள் கண்டு பிடித்து, அதற்கான நெறிமுறைகளோடு பழகிக் கொண்டு செயலாற்ற வேண்டும்.