பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

பஞ்சமோ பஞ்சமென்று பரிதவிக்கும் மக்களுடைய நெஞ்சை நனைத்துக் கொள்ள, ‘நா’வை-குளிராக்கிக் கொள்ள; தண்ணீர் இல்லை எனும் போது, பயிர்கள் விளைய மட்டும் தண்ணீர் கிடைக்க வழி எது? மழைபொழிய மறுத்துவிட்டது.

பசிக்கு உணவில்லை; உணவு உற்பத்தியும் இல்லை; உற்பத்தியின்மைக்கு மழை பொய்த்தது பெரும் காரணமாயிற்று! இந்த நிலைகளுக்கு இடையே டால்ஸ்டாய் புகுந்து ஏதாவது மக்கள் வேலை செய்யத் தயாரானார்!

லியோ டால்ஸ்டாயின் குடி பரம்பரையான பெருங்குடி ராஜவிசுவாசம் பெற்ற பிரபுக்கள் குடியில், செல்வம் பெருக்கெடுத்த பணக்கார வம்சத்தில்; இளவரசி மேரியின் புகழ்வயிற்றில் பிறந்ததால் அன்பு, இரக்கம், கருணை, மனிதாபிமானம், பசி, தாகம், அனைத்தையும் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர்களாக இருந்தார்கள்.

எனவே, ஏழை மக்களுக்கு ஏற்றதைச் செய்யலாம்; பசி, பஞ்சங்களைத் தவிர்க்கலாம் என்ற திறந்த மனதுடன் கிராம விவசாயிகள் இடையே தங்களாலான சேவைகளை அவர்கள் செய்தார்கள்.