பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

63

சொட்ட வேலை செய்து கொண்டே இருப்பார். உழைப்புக்கு மட்டும் அவர் வேளை நேரம் பார்க்கமாட்டார்.

மனைவிக்கு ஒத்தாசையாகவும் வேலை செய்வார்; அவருக்கு அன்றாடம் வரும் அஞ்சல்களைப் பார்த்து, பதில் எழுத வேண்டியவைகளுக்கு அப்போதே எழுதிவிடுவார். எதையும் நாளை பார்ப்போமே என்று நாள் நகர்த்தும் எண்ணம் அவருக்கு மறந்தும் வருவதில்லை. காரணம் பழக்கவழக்கமே!

இறுதியாக என்ன செய்வார் தெரியுமா? இதுதான் மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது ஞானி டால்ஸ்டாய் தன்னைத் தேடி வரும் மக்களைப் பார்ப்பார், காரணமறிவார்; அதற்கான உதவிகளை எல்லாம் தவறாமல் செய்து இனிமையாகப் பேசி அவர்களுடைய குறை நிறைகளை அறிந்து கொள்வார். அல்லது அவர்களுடன் சென்று நேரில் கண்டுணர்வார்.

டால்ஸ்டாய் தனது குணத்தையும் செயல்களுள் சிலவற்றையும் மாற்றிக் கொள்ள முடிவெடுப்பார்; முயல்வார் கோபத்தை அடக்குவார்; ‘உன்னையே நீ எண்ணிப் பாரு’ என்று தமிழ் நாட்டுச் சித்தர்கள் கூறியதுபோல, டால்ஸ்டாய் தன்னைத்தானே உணர்ந்து நீக்க வேண்டிய பண்புகளை நீக்கும் பணிகளிலே ஈடுபட்டார்.

மாஸ்கோவிலே இருந்த மாபெரும் ஞானி டால்ஸ்டாய் மனைவி மக்களோடு மீண்டும் தனது சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினார். வழக்கம் போல பண்ணையையும் கவனித்துக் கொண்டு ஓய்வு நேரங்களில் நீதி போதனை செய்யும் கருத்துக்களைக் கொண்ட கதைகளையும் எழுதினார்.

ஞான மேதை டால்ஸ்டாயின் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டவர்கள், ஒரு புத்தகம் பதிப்பிக்கும் நிறுவனத்தை நிறுவி, டால்ஸ்டாய் கட்டுரைகளை, சிறுகதைகளை, குறுநாவல்களை, நாவல்களை, அரசியல் விமரிசனங்ககளை நாடகங்களை அனைத்தையுமே திரட்டித் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்கள்.