பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

81

பிள்ளைகளையும் சாகடித்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள்; பயமுறுத்தினாள். ஆனாலும் அக்கம் பக்கத்தார் இருவருக்கும் புத்திமதியும் ஆறுதலும் கூறினார்கள். தனது குடும்ப கெளரவம் இவ்வளவு கேவலச் செயலுக்கு வந்த பிறகு, இதற்குமேல் இவளுடனும், பிள்ளைகளுடனும் இணைந்து வாழ வேண்டுமா? என்ற முடிவுக்கு வந்தார் டால்ஸ்டாய். அதனால், தனது தாய் நாட்டையும், குடும்பத்தையும் விட்டு விட்டு மனம் போனபடி எங்கேயாவது வெளியேறி விட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.