பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

காந்தியடிகள் தனக்கு குரு என்று இரண்டு மாமனிதர்களை ஏற்றுக் கொண்டார். அவர்களிலே ஒருவர், கோபால கிருஷ்ண கோகலே என்பவர். அவரை உத்தமர் காந்தியடிகள் தனது அரசியல் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக் கொண்டார்.

மற்றொருவர் லியோ டால்ஸ்டாய், உலக மக்களுக்கு என்ன ஒழுக்க உணர்வுகளை எடுத்தோதினாரோ, அதே நற்குண சீலங்களோடு தனது மரணம் வரை அவர் வாழ்ந்து காட்டி மறைந்தவர் என்பதால், காந்தியடிகள் அவரை, தனது அறவுணர்ச்சிகளுக்குரிய ஆசானாக ஏற்றுப் பெருமைப்பட்டு வாழ்ந்து மறைந்தார்.