பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிரிகளாய்ச் சிதறுண்டு ஒழிகின்றார். என்றாலும், பொறுத்திருந்து பாருங்கள்- புவிக்கோள் இதன்மீது நிறைந்திருக்கும் வானமெலாம் நெருப்புமிழச் செய்திடுவோம்! இருந்தாலும், இதையெல்லாம் எழுதுவதை விடவும் அதைத் திருத்தமுறச் சாதித்துக் காட்டுவதே சிறப்பாகும். அலுவலக நிர்வாகி யானாலும், அல்லதுவோர் தொழிலகத்தில், எந்திரத்தில் தொழில் புரிவோர் ஆனாலும், இன்றைக்கு நம்மவர்கள் யாரெனிலும், எல்லோரும் ஒன்றைமட்டும் நன்கறிவோம்: உழைப்பாளி வர்க்கம் தான் வெற் றீயினைப் பெற்றது. அந்த வெற்றியினை உருவாக்கும் பெற்றியினை லெனினவரே பெற்றிருந்தார்!- என்றறிவோம். அந்நாளில் கோமின்டர்ன் அதனில் தொடக்கமுற்று, இந்நாளில் கருக்கரிவாள்---சுத்தியலை இலச்சினையாய்ப் பொ றித்துப் புழங்கிவரும் புத்தம் புதுக்காள் வரைக்கும், நாம் பெற்ற வெற்றிகளும், சாதனையும்