பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சி பெறச் செய்தது வும், இறுதி வெற்றி அவர்க்கென்றே அறுதியிட்டுக் கூறியதும் லெனினன்றோ ? அவ்வாறே இறுதி வெற்றி கண்டதுவும் பாட்டாளி இன மன்றோ? இங்குள்ள விவசாயி எல்லோரும் லெனினவர்தம் மங்காப் பெரும் பெயரை, விவிலியநூல் தனிற் காணும் ஞானியர்கள் பெயர்களிலும் நனிசிறந்த திருப்பெயராய்ப் பேனித்தம் இதயத்துப் - பேழையிலே போற்றுகின்றார். ஏனெனிலோ- அவர்களது இனிய பெருங்கனவாய்த் தானிருந்த உழு நிலத்தை- அவர்களது தாத்தாக்கள் பற்பலபேர் பலகாலும் போராடிப் பார்த்துயிரை அர்ப்பணித்தும், தம்வாழ் வில் அடையாத பெருங்கன வை~- நனவாக்க, உழுதுவரும் நன்னிலத்தை உழவர்குலம் தனதாக்க உதவியதும் தகையாளன் லெனினன்றோ? அம்மட்டோ ? செஞ் சதுக்கம் அதனுள் துஞ்சுகின்ற கம்யூனார்டு வீரர்பலர் 5 கல்லறையின் உள்ளிருந்து, 125