பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச் சுதந்தர்யம், சோதரத்வம் என் நினை 8.1 பற்பல சொற் பதம் பயின்ற அன்னவர்தம் பம்மாத்தை அவர் தொலைத்தார். மார்க் சீயப் போர்க்கவசம் மார்பணிந்து, உரிமைக்காய் போர்க்கோ லம் பூண்டெழுந்த போல்ஷிவிக்குக் கட்சியெனும் ஒருகட்சி- ஒரேகட்...- 8.,லகில் உதித்தது காண் இரயிலினிலோ, காரினிலோ இந்நாளில் நீங்களெ லாம் ஏறி யமர்ந்தவராய் எங்கெங்கே சென்றாலும், ஆர். சி. பி. எனும் எழுத்தை , அதனருகே பி!' என்று 2.4 அடைப்புக் குறிப்பிட்டு அணிசேர்ந்த ஓரெழுத்தைத் தடையற்றுக் காண்பதற்கே தவறிவிட மாட்டீர்கள். இந்நாளில், வானியலார் இரத்தச் சிவப்பாக மின்னுசெவ்வாய் மீனதனைக் கண்டறிய வினைகின்றார். தொலைநோக்கிக் கோபுரங்கள். தூவெளியின் நீளத்தை வலைபோட்டு இனங்காணும் மகத்துவமும் காண்கின்றோம், 55