பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வசந்தம் மலர்ந்தது கிளப்புகிற உத்தியைக் கையாள்வதற்காக, வெற்றிலையைப் போட்டுக்கொண்டு சுவைத்திருக்க, என்னவேய், சொல் லுமே என்று இரண்டொருவர் கேட்ட பிறகு, புளிச்' செனச் சாறைத் துப்பிவிட்டு, சக்கையை ஒருகன்னத்து உப்பு தலுக்கு அண்டை கொடுத்து என்ன கேட்டேளா என்று விளக்குகிற ஆசீமான் அக்கப்போர் அளித்த தீர்ப்பு இந்த-வித மாகத்தானிருந்தது. “தம்ம பண்ணைப் பிள்ளைவாள் இருக்காகளே, அவாள். நீலாவதியை ஆதரிக்கிற விசயம் பொன்னம்மாளுக்குத் தெரிஞ்சிருக்கு அவ அதைப்பத்தி விசாரிக்கவே, பிள்ளைவாள் சொல்லிட்டாகளாம்.-ஏ பொன்னு, இந்தா பாரு, என் விசங்களிலே நீ தலையிடப்படாது, ஆமா. சொல்லிப் போட் டேன். உன்விசயங்களிலே நானும் தலையிடறது இல்லே. தெரி யு.டிா?-அப்படீன்னு லைசென்சு கொடுத்திருக்காகளாம்!” உங்களுக்கு யாரய்யா சொன்னது இதை?’ என்கிற கேன் விக்கு அலர்கள் சொல்லக்கூடிய பதில் தெரியாதா! இதெல்லாம் யாரும் சொல்லியா தெரியணும்! என்பது தான். வருஷங்கள் ஒடிஞலும், ஊரார் பேச்சின் கதி மாற வில்.இ. பொன்னம்மாள் பிள்ளையவர்களின் லீலேகளைப்பற்றி உண்மையிலேயே என்ன கருத்து கொண்டிருந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலுமென்ன. ஆளுக்குள் ஆள் இஷ்டம்போல் பேசி மகிழ்வதுதானே மனித உரிமை ! நீலாவதி வீட்டுக் கல்யாணப் பந்தல் தீப்பிடித்து எரிந்து அணந்ததைப் பார்த்துவிட்டுத் திரும்பிய சிவகுருநாதப் Hள்ளே பொன்னு. ஏய்.ஏ பொன்னு!" என்று வீட்டுக் கதவைத் தட்டும்போது மணி மூன்றேகால். பல தடவைகள் கூப்பிட்டு, அதைவிட அதிகமான முறைகள் பலமாகக் கத வைத் தட்டிய பிறகு சடார் என்று ஒலித்தது தாழ்ப்பாள். கதவு லேசாகத் திறந்தது. - -