பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 56 . வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் இருக்கிறது. என் மனதின் பொய்த் தோற்றமோ சீ இல்லை! இல்லை! அந்த மாதுசிரோன் மணியே இவள் இங்கு வந்த காரணம் என்ன? அதோ திரும்புகிறாள்? கண்ணைத் திறக்கிறாள்! (தண்ணி வேண்டும் என்று சைகை செய்கிறாள்) சந் : (தனக்குள் சமீபத்தில் நீரோடை இருக்கிறது. ஜலத்தை எப்படி எடுத்துக் கொண்டு வருகிறது? திருவோடு கூட என்னி டத்தில் கிடையாது; இதோ மாமரம் இருக்கிறது. அதன் இலை களைத் தொன்னையாகத் தைத்து அதில் எடுத்து வருகிறேன். (போப் ஜம்ை கொணத்து அருந்துவித்து கரத் துணியான் முகத்தைத் துடைத்து அதனால் விசிறுகிறான்.) வஸ் (எழுந்து ஸ்வாமி நமஸ்காரம் இந்த உதவி செய்த தங்களை ஈசுவரன் அவசியம் காப்பாற்றுவார். சந் அம்மா! நான் யார் என்று உங்கள் நினைவிற்கு வரவில் Googu што . வஸ் : (யோசனை செய்து அடையாளம் தெரியவில்லையே! சொல்லுங்கள். சந் முன்னொரு நாள் இரண்டு சூதாடிகளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து என்னை மீட்டது நினைவிற்கு வருகிறதா? வஸ ஆம், ஆம்! ஞாபகம் இருக்கிறது! அதற்குப் பின் காஷாயம் வாங்கிக் கொண்டாற் போல் இருக்கிறது! - சந்: ஆம். நீங்கள் இவ்விதம் இங்கிருக்க வேண்டிய காரணம் என்ன? எந்தப் பாதகன் இப்படிச் செய்தான்? விவரத்தைத் தெரிவிக்கலாமோ? . வஸ எனக்கு இப்பொழுது மிகவும் களைப்பாய் இருக் கிறது. எல்லாவற்றையும் என் வீட்டிற்குப் போய்ப் பிறகு தெரி விக்கிறேன். தயவு செய்து என்னை என் வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்த்தால் உமக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/158&oldid=887429" இலிருந்து மீள்விக்கப்பட்டது