பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 163 மாத அப்படியா! அவள் இப்பொழுதுதான் சமீப காலத் தில் சாதாரணமாகப் பரிச்சியம். அதனால் குற்றம் என்ன? ஸ்திரீ புருஷர்களுக்கே பாலியத்தில் விளையாட்டுக்கள் இருப்பது சகஜந்தானே! நியா: ஐயா மாதவராயரே மறை பொருளாய்ப் பேசுவதை விட்டு வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும். நான் இங்கு சட்டப்படி கேட்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். . மாத என் பேரில் குற்றம் சுமத்துகிறவர் யார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டுகிறேன். வீர இதோ! நான்தான். மாத நீங்களா அப்படியானால் விஷயம் பெரிதாக இருக்க வேண்டும். வீர ஆம், தடை என்ன. இவ்வளவு கீர்த்திப் பெற்ற வஸந்த ஸேனையைக் கொன்று அவளுடைய ஆபரணங்களை அப கரித்துக் கொண்டால் அது ஒருவருக்கும் தெரியாது என்று நினைத் தாயோ! - மாத உமக்கென்ன புத்தி மாறாட்டம் கொஞ்சம் உண்டா? நியா சரி போதும்; வஸந்தஸேனை இப்பொழுது எங்கு இருக்கிறாள்? மாத தன் வீட்டிற்குப் பேர்யிருக்க வேண்டும். வீர தன் வீட்டிற்கா போயிருக்க வேண்டும் ஆகா! என்ன துணிபு? நீ அவளை என்னுடைய சோலைக்கு இரகசியமாய் அழைத்து வந்து கழுத்தை இறுகப் பிடித்துக் கொன்று அவ ளுடைய நகைகளை அபகரித்துக் கொள்ளவில்லையா? தன் வீட்டிற்குப் போயிருப்பாள் என்று எப்படிச் சொல்லுகிறாய். மாத (காதில் கையை வைத்து மூடிக் கொண்டு) ஆகாகா ஈசுவரா என்ன வார்த்தைகளைக் கேட்கும்படி வைத்தாய்; இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/165&oldid=887443" இலிருந்து மீள்விக்கப்பட்டது