பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 r தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவ) மானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்! இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக் கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஒர் வாசக உல கினைப் படைத்துக் கொண்ட Qugjølduff Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கீல் குறிப் பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின. திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சி கள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார். வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அள வுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தின ரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வர லாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. - நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு (மது.ச. விமலானந்தம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/9&oldid=887667" இலிருந்து மீள்விக்கப்பட்டது