பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 x வடநாட்டுத் திருப்பதிகள்

கொண்டு அம்மழலை வண்டினை ஒச்சி நிற்கின்றது. பிறகு அந்தத் தேன் கூட்டினை அப்படியே அசையாமல் தன் துதிக்கையினால் வாங்கி சூல் நிறைந்து பருகுவதற் கும் சிரமப்படும் தன் பிடியின் வாயில் பருகுமாறு தந்து நிற்கின்றது-கல்கத்தா ரசகுல்லாவைத் தருவது போல.

இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் சிறுதுளியை யுடைய காள மேகங்கள் அதிர்கின்றன. தோகைகளை யுடைய மயில்கள் ஏற முடியாமல் உன்னதமான மலை யுச்சியில் கீழ்வயிறு தழுவும்படியாக ஏறிச்சென்று தோகைகளை விரித்துக் கூத்தாடுகின்றன (1). மலை போன்ற வடிவினையுடையவனாய், வடிவுக்கேற்ற மிடுக்கையுடையவனாய், மிடுக்குக்கு உரிய சினத்தை உடை யனவாய் மதக் களிறுகள் அஞ்சும்படியாக வாள் போன்ற பற்களையுடைய சிங்கங்கள் திரிகின்றன (2). இந்திர நீல மணிமயமான பாறைகளின் மீது வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய படுக்கையின்மீது களிறுகள் தம் பிடிகளுடன் கிடந்து உறங்குவதற்குப் பாங்காக வண்டுகள் இன்னிசை பாடுகின்றன (3). பன்றிகள் தலை குனிந்து மாணிக்கப் பாறைகளைப் பிளக்க அத னால் பெயர்த்த மணிகள் மலையருவிகளுடன் அடித்து வரப்பெறுகின்றன (4). முகில்வரை எட்டி வளர்ந்த குருக்கத்திப் பூஞ்சோலைகளில் வண்டுகள் தேனினைப் பருக நுழைந்து இசை பாடுகின்றன (6). அசோக மலர் கள் விரியும்போது செந்நிறத்தோடு திகழும் அழகைப் பேதை வண்டுகள் நெருப்பென மயங்கி அஞ்சுகின்றன (9). மிளகுக் கொடிகள் விண்ணை எட்டும் வேங்கை மரங்களைத் தழுவிப் படர்ந்து நிற்கும் சிறு மலைகளில் வேங்கை வரிப்புவிகள் நடமாடுகின்றன (7). இருள் சூழ்ந்த மலை முழஞ்சுகளில் பெரும் பசியுடன் மலைப் பாம்புகள் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளன (8). கறுத்த மாமுகில்கள் நீர் கனத்தாலே இயங்க முடியாமல்