பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வடநாட்டுத் திருப்பதிகள்

இந்த விரஜபூமி 108 சதுரமைல் பரப்புடையது. இதில் பல புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் உள்ளன. இதன் நடுவில் தூய பெ ரு நீ ர் யமுனை பெரு வெள்ளமிட்டுப் பாய்ந்து எங்கும் பசுமைக் காட்சி வழங்கும் மருத நில வளத்தை அளிக்கின்றது. விரஜ பூமி யில் கண்ணன் திருவடி படாத இடமே இல்லை எனலாம். திருவாய்ப்பா (நந்த கோகுலம்), வடமதுரை (மதுரா), கோவர்த்தனம், இராதை அவதரித்த இராதாபர் காம் என்ற ஊர், கண்ணன் லீலைகள் புரிந்த பிருந்தாவனம் ஆகிய புனிதமான இடங்கள் யாவும் இந்த விரஜ பூமியிலுள்ளன.

கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியிலுள்ள நந்தகோபன் முதலான ஆயர்கள் கண்ணனுக்கு அங்கு அடிக்கடி நேரிட்ட பேரிடர்களை உற்பாதங்கள் எனக் கருதி மகாவனம்’ எனப்படும் அவ்விடத்தை விட்டுக் கன்று காவி முதலிய எல்லாப் பொருள்களுடனும் பிருந்தாவனத் திற்குச் சென்று அங்குக் குடியேறினர். நெருஞ்சிக் காடாக இருந்த அவ்வனம் கண்ணன் திருவருளால் பசுக்கள் முதலானவை பெருகுவதற்கு ஏற்ப மிகச் செழிப்புற்றது. இங்குக் கண்ணன் ஆநிரைகளை மேய்த்துக் கொண்டும் பல திருவிளையாடல்களைப் புரிந்து கொண்டும் காலம் போக்கினன்.

வடமதுரையிலிருந்து பிருந்தாவனம் சுமார் பத்துக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. வடமதுரையிலிருந்து பிருந்தாவனத்திற்குப் பேரு ந் து வசதி உண்டு. தோங்காவில் இவ்வூருக்கு ஏகுகின்றோம். பிருந்தாவனம் கண்ணன் குழலூதி கோபியருடன் இராசக்கிரீடை” (குரவைக் கூத்து) நிகழ்த்திய இடமாகும். இங்குக் காளியன்மடு, கோபியரின் துகிலுரிந்த கட்டம், கேசி என்ற அசுரனைக் கொன்ற இடம் (கேசி கட்டம்), கோபியரின் பக்திப் பரவசத்தைக் கண்ட அக்ரூரர்