பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கவே.ழ் குன்றுடை ஈசன் 29

பிளந்து தள்ளுகின்றன.” நாம் வண்டியில் செல்லும் போது ஆழ்வார் காலத்தில் நிலவிய சூழ்நிலையை இன்றும் காணலாம்படி உள்ளதே என்று வியப்பில் ஆழ்கின்றோம்.

இங்ஙனம் அச்சத்தை விளைவிக்கும் அடவியில் யானை, சிங்கம், புலி முதலிய கொடிய விலங்குகள் இங்கு மங்கும் ஒடியலைந்து ஒய்ந்து நிற்கின்றன.” மூங்கில் புதர் களினின்றும் புலிகள் பெருவழியில் வந்து சேர்ந்து யானை கள் நடமாடின அடையாளங்களைக் கூர்ந்து ஆராய்கின் றன. அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின் றன. மற்றும் இங்கு நடுப்பகவில் பகலவன் காலும் வெப்பம் தாங்கமாட்டாது நாய்களும், கழுகுகளும் அவ்விடத்தில் நடக்கும்பொழுது கா ல் தடுமாறித் திண்டாடுகின்றன.’ எம்பொருமானின் சந்நிதான மகிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி யில் திளைக்கின்றன. சிங்கங்கள் களிறுகளைக் கொன்று அவற்றின் கோடுகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து எம்பெருமான் திருவடிகளில் வைத்து பகவத்ாராதனம் நடத்துகின்றன”. இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே யிருக்கச் செய்தேயும், பகவத் பக்தி ஒரு படிப்பட்டுச் செல்லுமாயிற்றே; சீற்றம் விக்ருதியாய் (தோன்றியது) பகவத் பக்தி ப்ரகிருதியாய் (மூலகாரண மாய்) இருக்குமாயிற்று’ என்ற வியாக்கியானப் பகுதி அநுபவித்து மகிழத் தக்கது. எம்பெருமானுடைய வரலாறு எதுவாயிருந்தாலும் அஃது ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வதுபோல் அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவை எதுவாயிருப்பினும் அவ்விடத் தவை என்ற காரணத்தினால் எல்லாம் இந்த ஆழ்வாருக்கு

13. பெரி. திரு. 1.7 : 9 16. οδιφ. 1.7 : 4 14. 6... 1.7 : 17. . 1.7 : 1 15. டிை. 1.7 : 2