பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வட நாட்டுத் திருப்பதிகள்

இன்பம் தருவனவாகும். “பிறர்க்குக் குற்றமாய்த் தோன்றுபவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே ஒரு விஷயத்தை உகக்கையாகிறது’ என்ற வியாக்கியான பகுதி சிந்திக்கத் தக்கது.

இந்தச் சூழ்நிலையில் மக்களின் நடமாட்டத்தையும் பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார்.

‘மலைத்தசெல் சாத்தெறிந்தபூசல்.

வன் துடி வாய்கடுப்ப சிலைக்கே வேடர் தெழிப்பறாத

சிங்கவேழ் குன்றமே.’ (மலைத்த-ஆக்கிரமிக்கப் பெற்ற சாத்து-திருத்தலப் பயணிகளின் கூட்டம், பூசல்-போர், பேரொலி: துடி-பறை: வாய்கடுப்ப் - ஒலிக்க; தெழிப்புஆரவாரம்1 என்பது ஆழ்வாரின் திருவாக்கு திருத்தலப் பயணமாகப் பலர் அந்த அடவியில் செல்லுகின்றனர். அவ்விடத்து. வேடர்கள் அவர்களைத் தகைந்து போரிடுவர். ஒருவரோ டொருவர் பெரும்போர் நடத்துவர். அப்போரில் வேடிர் களின் வில்லோசையும். பறையோசையும் இடைவிடாது இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது இம்மலையில் வாழும் வேடர்கள் செஞ்சு’ என்ற பெயர்களால் வழங்கப் பெறுகின்றனர். இவர்கள் மரபில் பிறந்த மங்கை யொருத் தியை எம்பெருமான் உகந்து மணந்துகொண்டதாகத் தல வரலாறு கூறுகின்றது. இதனால் இப்பகுதி மகளிருக் குச்செஞ்சுலட்சுமி என்று பெயரிடும் வழக்கமும் இருத்து வருகின்றது.

இனி, பாசுரங்கள் தோறும் நரசிம்மாவதாரப் பெருமையில் ஆழ்வார் ஆழங்கால் படுவதையும் காண் போம். இரணியனை மாய்க்கும் பொருட்டும், அவன்

18. டி. 1.7 : 3 இன் உரை. 19. ώηφ. 1. 7 : 2