சிங்கவே.ழ் குன்றுடை, ஈசன் 31
மகன் பிரகலா தனை காத்து ஆட்கொள்ளும் பொருட்டும் நரசிங்கப் பெருமான் அவதரித்தனன் என்பதை நாம் அறிவோம்.
“எங்கும் உளன்கண்ணன் என்ற
மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று
இரணியன் தூண்புடைப்ப அங்கு அப்பொழுதே அவன்
வீயத் தோன்றியளன் சிங்கபிரான் பெருமை
ஆராயும் சீர்மைத்தே.’
(காய்ந்து-சிலந்து, புடைப்ப-தட்ட வீய-இறக்க:
என்று நம்மாழ்வார் இந்த அவதாரத்தில் ஆழங்கால் படுவர். பெரியாழ்வாரும்,
‘அளந்திட்ட துணை அவன்தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு வாள்.உருச் சிங்க உருவாய்.”
என்று அந்த அவதாரத்தை அநுபவித்து மகிழ்வர். கம்யநாடனும்,
‘கசைதிறந் திலங்கப் பொங்கி
நன்றுகன் றென்ன கக்கு விசைதிறங் துருமு வீழ்ந்த
தென்னவே தூணின் வென்றி இசைதிறங் துயர்ந்த கையால்
எற்றினன், எற்ற லோடும் திசைதிறங் தண்டங் கீறி
சிரித்தது செங்கட சீயம்’
20. திருவாய். 2. 8 : 9 21. பெரியாழ். திரு. 1. 6 : 9 22. கிம்ப, யுத்த-இரண்ணி-127