பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

இராமனின் திருக்கோயில்கள் உள்ளனவென்று கேள்வியுறு கின்றோம். அயோத்தியில் இல்லங்கள்தோறும் இராமன் திருவுருவத்தை வழிபடுகின்றனர். இவ ற் றை யு ம் திருக்கோயில்களாகக்கொண்டு கணக்கிட்டனர் போலும். என்றாலும், திருவயோத்தியில் இராம பக்தி உச்ச நிலையில் உள்ளது என்பதை மறுத்தற்கில்லை.

இத்திருக் கோயிலிருந்து சற்றேறக்குறைய ஆறு கிலோ மீட்டர் தொலைவில் சரயுநதியில் குப்தர் படித்துறை உள்ளது. இராமன் சரயுததியில் மூழ்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளின இடம் இதுதான் என்று சொல்லு கின்றனர். இந்த இடம் வந்ததும்,

‘அன்றுசரா சரங்களை வைகுந்தத் தேற்றி

அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வென்றிலங்கு மணிநெடுக்தோள் கான்கும் தோன்ற

விண்முழுதும் எதிர்வரத்தன் தாமம் மேவி'20 (சரம்-இயங்குதிணை: அசரம்-நிலைத்திணை, விண் முழுதும்- பரமபதத்திலுள்ளவர்கள் அனைவரும்; தாமம்-இடம்) என்ற குலசேகரப் பெருமாளின் திருமொழிப் பகுதி நம் நினைவுக்கு வருகின்றது. இந்நிலையில் நாம் நம்மையும் மறந்து நாமும் முக்தராக வைகுந்தத்திற்குச் செல்லும் அநுபவத்தைப் பெறுகின்றோம். சரயுநதியில் மூழ்கினால் இருவினைகளும் கழன்று போகின்றன என்ற அநுபவத் தையும் பெறுகின்றோம்.

இங்கிருந்து சரயுநதிக் கரையிலுள்ள ‘அநுமான் தேக்ரி’ என்று வழங்கப்பெறும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருகின்றோம். இங்கு எழுந்தருளியிருக்கும் சிறிய திருவடி பேருருவம் கொண்டவர். தலைப்பகுதி மட்டிலும் வெளி

2பெரு. திரு. 1ெ