பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வடநாட்டுத் திருப்பதிகள்

இந்தத் திருப்பாசுரம் ஆன்ம சொரூபத்தை உணர்த்த வல்லது. நர-நாராயணன் எழுந்தருளியிருக்கும் திருத்தலத் திற்குப் போய்த் தொழுவதற்கு அரிதாயினும், எப்படி யாவது சென்று அப்பெருமானைத் தொழுது உய்வு: பெறல் வேண்டுமென்று தமது நெஞ்சிற்கு அறிவுறுத்துவர் அய்யங்கார் .

இத் திருத்தலப் பயணம் என்றும் பெறாத மனநிறை வினைத் தருகின்றது: பெறற்கரிய பெரும்பேற்றைப் பெற்றதாக எண்ணுகின்றது. பரிபூர்ண பிரம்மாநந்தம் பெற்ற களிப்பையும் நல்குகின்றது. இந்த மனநிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.