பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் - மாலவனுக்கா? வேலவனுக்கா? 33 விலங்கும் வீடுது கின்றன மெய்ந்நெறிப் புலங்கொள் வார்கட் கனையது பொய்க்குமே: 辞” -கிட்கிந்தை ஆறுசெல், 35 என்று அம்மலையைச் சிறப்பித்தனர். 6. ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரும் திருவேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே (திருவாய் 3. 3:7) என்று பணித்தருளினர். 7. முன்னோர் கூறிய மரபை நன்குணர்ந்த சிவப் பிரகாச அடிகளும் தாம் பாடிய கீகாளத்திப் புராணத்தில் அரவணைச் செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லைத் திருமலை கண்டு ணர்ந்தோர் செறிவினைத் தொடர றுக்கும் பெருமலை கண்டி றைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும் பொருவரும் ஏம கூடப் பொருப்பினை இனிது கண்டான். என்று பாடினார். 8. திருவேங்கடத்துக் கோயில் காப்பவராக முருக வேள் அமைந்துள்ளார் என்று கூறப்பெறுவதற்கேற்ப அத்திருமலைச் செவ்வேளை அருணகிரியார் பாடியுள்ள னர் என்பதை நாம் அறிவோம். ஆயினும், அவர் திரு வாஞ்சியத்தைப் பற்றின. இபமாந்தர் சக்ரபதி என்ற திருப்புகழில் வேங்கடத்து அண்ணலை பிரசித்த நெடிய வன்’ என்றும் உயர் சார்ங்க சக்ரகரதலன்' என்றும் கூறி