ix ஆழ்வாரில் தலைமணியாம் நம்மாழ் வாரை அருகணைய வாய்த்ததுவோ ஆய்வுப் பேறு; பால்வார்க்கும் தாய்போலந் துறைகள் தோறும் பலநூல்கள் அவர்யாத்தல் தமிழர் பேறே! வேங்கடத்தை நடுவாக வைத்துக் கொண்டு வெகுகாலப் பட்டறிவை வழங்கு கின்றார்; வேங்கடத்தான் எம்பெருமான் வாழும் வீடு வேங்கடமே என நினைக்கும் வாய்க்கும் வீடு; வேங்கடத்தான் இலக்கியத்தில் காலம் தோறும் விளங்குவதை அழகாக விரித்துப் பேசி வேங்கடத்தான் திருவடியில் சார்த்தும் மாலை வெகுநேர்த்தி யாய்விளக்கும் இந்த நூலே. இவ்வொரு நூல் படித்தாலே என்ன என்ன எய்திடலாம் என்பதனைச் சுருங்கச் சொல்வேன்: செவ்வையுறு வாழ்வுவரும்; வைண வத்தில் தெளிவுவரும்; ஈட்டுரையில் தேன்கிடைக்கும்; திவ்வியமாம் பிரபந்தத் திரட்டும் பாலும் திருமாலின் அருளோடு சேர்ந்து கிட்டும்; ஒவ்வொருசொல் பிழையாக அச்சா னாலும் உயர்திருமால் செளலப்பியம் இந்த துலே! வாங்கியகை பூமணக்கும்; இந்த நூலை வைத்தஇடம் தேன்மணக்கும்; படித்து விட்டுத் தூங்குகையில் திருமலையான் தென்றல் காற்று துளயத்தின் நறுமணத்தைக் நெஞ்சில் தேக்கும்; ஆங்காங்கே அருள்மணக்கும்; திவ்ய தேசம் அடைந்தபயன் அத்தனையும் நொடியில் கிட்டும்; பூங்குயிலாய் ஆசானின் புகழைப் பாடும் பொற்பேறு மாணவன் என் பிறவிப் பேறே.