பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளும் திருவேங்கடமுடையானும் #39 என்று அந்த மேகங்கள் செய்யத் தக்கதைச் செப்புகின் றாள். 'உலங்கு என்ற பெருங் கொசுக்கள் விளாம்பழத் தில் மொய்த்தால் அதன் சாறெல்லாம் சுவறிப்போவது போல், என் உடம்புடன் அணைந்து என் ஆற்றல் முழுவ தையும் கொள்ளை கொண்ட பெருமானுக்கு நான் இங்ங்ணம் நோவுபட்டுக் கிடக்கும் நிலையை எடுத்துக் கூறுங்கள்' என்று வேண்டுகின்றாள். நான்காவது செய்தி : இஃது உயிரனைய செய்தி யானதால் சொல்லும் போே மிகப் பணிவாகக் r" த் தொடங்குகின்றான். சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்கான்! வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக் கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம். -நாச். திரு. 8:7 (சங்கம்-சங்கு: மா-பெருமை வாய்ந்த, சே அடிசெல்விய அடி அடி வீழ்ச்சி-அடியேனுடைய) என்ற பீடிகையுடன் தொடங்குவது கண்டு மகிழத் தக்கது. அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய செய்தியைத் தெரிவிக் கின்றாள். கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுத் தொருநாள் தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே. - -நாச், திரு. 8:7 "அவர் என்னுடன் கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத் தடங்களில் குங்குமக் குழம்பு பூசி அணி செய்து வைத்துள்ளேன்; அதனைப் பயனுடையதாம்படிச் செய்வாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கள்’’ என்