பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii தாலும் பிறசமயங்களின்மீது காழ்ப்பு இல்லாதவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்கள்மீதும் உடையவர் மீதும் மணவாள மாமுனிகள் மீதும் ஈடற்ற பக்தி மிக்கவர். இவருடைய பல நற்குணங்களின் சாயை அடியேன் மீதும் சிறிதாவது படர்வதற்கு கோவிந்தனின் திருவருளே துணை நின்றது என்பதை நினைவுகூர்கின் றேன். பரமபதவாசி காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் என் உள்ளத்தில் நிரந்தர இடம் பெற்றிருப்பது போலவே இந்தச் சுவாமிகளும் நிரந்தர இடம் பெற்றிருப்பவர்கள். இத்தகைய பெரியா ரின் அணிந்துரை பெற்றது இந்நூலின் பெருமையை மிகுவிக்கிறது; அடியேனது பேற்றையும் நினைக்கச் செய்கின்றது. இத்தகைய ஆர்த்தருக்கு அடியேனின் நன்றி கலந்த வணக்கம் என்றும் உரியது. 1950-ஜூலை முதல் காரைக்குடி வாழ்வு கிட்டியது கற்பக விநாயகர் அருளால். அதற்கு முதல் ஆண்டு ஏப்ரல் மே திங்களில் இதற்கு ஒளி காட்டும் அருணோதயம்போல் காரைக்குடி கம்பன் விழா என் காட்சிக்கு இலக்காகியது. அதற்குச் சென்றிருந்த எனக்கு மகளிர் இல்ல ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த இரண்டும் முறையே கணபதியுடனும் கந்தனுட னும் உறவு ஏற்பட்டதுபோல் சா. க. உடனும் சொ. முரு. வுடனும் உறவு ஏற்பட்டது. இருவருமே அவரவர் குறிக்கோள்களில் தொண்டின் வடிவுகள்’. இருவரும் கழகங்கள் கண்டு தொண்டாற்றிய உயர்குணச் செம்மல்கள். சொ. முரு. ஓர் அருமையான மனிதர்; ஒப்பற்ற சான்றோர்; நாட்டுப் பற்றாளர்; சைவசமயத்தில் ஆழங் கால்பட்டவர். அடியேனுடன் பழகும்போது நீறு பூசாத நெற்றியுடன் திகழ்ந்தாலும் ஒரு காலத்திடல் திருநீற்றை மூட்டை மூட்டையாகப் பூசிக்கொண்டு, அக்கமணிகளைக்