பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் 露露器 "திங்களின் வெண்கதிர் அடைந்தவீட் டகத்தே சேர்தரும் இருள்தணிற சார் தரு கரும்பர் மங்கலச் சுடரவன் திருவரு ளாலே மகிழ்வொடு விடுதலை பெற்றுநின் துளபம் தங்கிய தேனினை நுகர்தர வந்து தகவொடு செவ்வழி பாடிடும்; அரசே! துங்கநன் னலமருள் வேங்கடச் செல்வா! சுந்தர னே பள்ளி யெழுந்தரு ளாயே (சுரும்பர்-வண்டுகள்! இப்பாடலில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப் பள்ளி எழுச்சி'யிலுள்ள முதற்பாடலின் சாயல் தென்படு கின்றது. அலங்காரம் : அலங்காரம்' என்பது ஒருவகைச் சித் றிலக்கியம். தொண்ணுாற்றாறு என்ற தொகையில் இதனையும் அடக்கலாம். கால வெள்ளத்தில் இத்தொகை தொண்னு ற்றாறையும் கடந்து போக வாய்ப்புண்டு. இங்ங்னம் தோன்றும் சிற்றிலக்கியங்களை, விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.* என்று தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடக்கலாம் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கற்றார் அறிந்த செய்தியாகும். அருணாகிரியார் இயற்றிய கந்த ரலங்காரம் இவ்வகை நூலைச் சார்ந்தது. இராம ராசனின் அலங்காரத்தில் ஒருபாடல்: 'உள்ளத்தி லுள்ளும் தொறுங்களிப் போங்கி யுறுதுயர்செய் 4. தொல். பொருள். செய்யு. 239