கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் 露露器 "திங்களின் வெண்கதிர் அடைந்தவீட் டகத்தே சேர்தரும் இருள்தணிற சார் தரு கரும்பர் மங்கலச் சுடரவன் திருவரு ளாலே மகிழ்வொடு விடுதலை பெற்றுநின் துளபம் தங்கிய தேனினை நுகர்தர வந்து தகவொடு செவ்வழி பாடிடும்; அரசே! துங்கநன் னலமருள் வேங்கடச் செல்வா! சுந்தர னே பள்ளி யெழுந்தரு ளாயே (சுரும்பர்-வண்டுகள்! இப்பாடலில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப் பள்ளி எழுச்சி'யிலுள்ள முதற்பாடலின் சாயல் தென்படு கின்றது. அலங்காரம் : அலங்காரம்' என்பது ஒருவகைச் சித் றிலக்கியம். தொண்ணுாற்றாறு என்ற தொகையில் இதனையும் அடக்கலாம். கால வெள்ளத்தில் இத்தொகை தொண்னு ற்றாறையும் கடந்து போக வாய்ப்புண்டு. இங்ங்னம் தோன்றும் சிற்றிலக்கியங்களை, விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.* என்று தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடக்கலாம் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கற்றார் அறிந்த செய்தியாகும். அருணாகிரியார் இயற்றிய கந்த ரலங்காரம் இவ்வகை நூலைச் சார்ந்தது. இராம ராசனின் அலங்காரத்தில் ஒருபாடல்: 'உள்ளத்தி லுள்ளும் தொறுங்களிப் போங்கி யுறுதுயர்செய் 4. தொல். பொருள். செய்யு. 239