பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? வடவேங்கடமும் திருவேங்கடமும் கண்டேன். அவர்கள் குடிசைகளை அமைத்துக் கொண்டு தங்கியிருந்ததையும் பார்த்தேன். இன்று அப்பகுதியில் வேங்கைகளும் யானைகளும் காணப்பெறுவதில்லை. அவற்றிற்குப் பதிலாக காட்டுப் பன்றிகளும், நரிகளும் அப்பகுதியில் அலைந்து திரிகின்றன. நொடியுள்ள காட்டு தெறிகளில் மாட்டு வண்டிகள் வித்தைகள் செய்வதுபோல் எழுந்தும் விழுந்தும் செல்லும் காட்சிகளைக் காணலாம். நாடு விடுதலை பெற்ற பிறகு சில பகுதிகளிலுள்ள நெறி களில் மண்சாலைகள் அமைக்கப் பெற்றுள்ளன. தொண்டையர் ஆட்சிக்குக் கீழிருந்த நாட்டுப் பகுதி யும் மேற்கூறப்பெற்ற புல்லி ஆண்ட பகுதியை விடச் சிறப்பாகவுள்ளது என்று சொல்லுவதற்கில்லை. இப்பகுதி பற்றிய 'நிழற்கவின் இழந்த நீரில் நீளிடை அழலவிர் அருஞ்சுரம் நெடிய வென்னாது” -அகம்-213 (கவின்-அழகிய நீர்இல்-நீர்இல்லாத நீள் இடைநீண்ட இட்ம், அழல்-நெருப்பு] என்ற அகநானூற்று அடிகளால் இது நீரற்ற வரண்ட இடம் என்றும், மரநிழல் இன்றி நெருப்பைக் கக்குவதாக நீண்டு வளைந்த நெறிகளையுடையதாகவும் உள்ளது என்றும் அறிகின்றோம். இன்னொரு அகப்பாடலின் 'பயந்தலை பெயர்த்து மாதிரம் வெம்ப’’ - அகம்-311 (பயம்-நீர், தலைபெயர்த்து-நீங்கி; மாதிரம்திசை, வெம்பு-கொதிக்க) என்ற அடியால் அப்பகுதியின் எல்லாப் பக்கங்களிலும் நீர் வரண்டு வெப்பத்தால் கொதிக்கின்றது என்பது தெரி கின்றது.