பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍螺 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற புறப்பாட்டடிகளால் வானம் பொய்க்காது மழை பொழிதலால் மலை போன்ற நெற்குவியலை விளைத்த வேங்கடத்தின் வடபுறப்பகுதி வற்கடத்தால் தாக்குண்டு கிடக்கின்றது என்று கூறுவதினின்றும் இதனை அறிய லாம். ஒருகால் இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. க ர் ந | ட க ப் பகு தி ைய யொட்டியுள்ள வ ள ம | ன இந்துப்பூர், இலேபாக்சி என்ற பகுதிகளை இது குறிப்ப தாகவும் கொள்ளலாம். செழிப்புள்ளவைகளாக இருப் பிலும் இப்பகுதிகளில் சில சமயம் வற்கடமும் தோன்று கின்றது. வடவேங்கடம் இன்ன தென்பது: இதுகாறும் கூறியவற்றால் வடவேங்கடம் இன்னதென ஒரளவு வரையறை செய்ய முடிகின்றது. தமிழ்கூறு நல்லுலகத் திற்கு வடதிசையில் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரையிலுமுள்ள நீண்டமலைத் தொடர்கள், பொறுக்க முடியாத வெப்பத்துடன் கூடிய காடுகள், சுவடுகள் இவற்றுடன் கூடிய குன்றுகள், சிறு குன்றுகள் அடங்கிய பகுதியே சங்க நூல்களில் குறிப்பிடப் பெறும் "வடவேங்கடம் என்பது தெளிவாகின்றது. இப் பகுதி மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை தொடர்பு அறாத வட எல்லையாக அமைந்திருப்ப தால் அது "வடவேங்கடம்' என்ற பெயருடன் வழங்கிற்று. தொல்காப்பியப் பாயிரமாக அமைந்த பனம்பாரனார் நூற்பாவில் வடவேங்கடமும் தென் குமரி என்ற தொட ரிலுள்ள வடவேங்கடமும்'ஏனைய சங்க நூல்களில் குறிப் பிடப் பெற்றுள்ள வேங்கடமும் இப்பகுதியையே குறிக்கின்றது என்பதை உறுதியாக அறுதியிடலாம். இந்த வேங்கடத்தின் சரியான எல்லைகளை வரை யறை செய்து காட்டுவதற்கேற்ற போதுமான சான்றுகள் இல்லை என்பது உண்மையே. ஆயினும் கிடைத்த அள