பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வடவேங்கடமும் திருவேங்கடமும் பிழியார் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும் மொழிபெயர் தேஎம்’ அகம்-295 (புடையல்-ஒலிக்கின்ற; நடைஅறா செல்லற்கு அரிய, விலங்கி-கடந்து; நோன்சிலை-வலிய வில்; பகழி-அம்பு _ பிழி-கள், கலி-செருக்கு; .ெ மா ழி பெயர்-வேற்று .ெ மா ழி வழங்கும்; தேஎம்.தேசம்) என்ற அகப்பாட்டடிகளால் இது தெளிவாகின்றது. இப் புல்லி என்பான் கள்வர் இனத்தாரின் தலைவனாவான். சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் அமைதி யைக் குலைத்து நாட்டைப் பாழாக்கிய களப்பிரர் என்ற இனத்தாரையும் கள்வர் குலத்தவராகவே கருதுவர் சில வரலாற்று ஆய்வாளர்கள். தென்னவர் என வழங்கப் பெறும் பாண்டியர் கள்வர் தலைவராவர் என்றும், அப் பாண்டியர் படைக்குப் பயன்பெறும் யானைகள் யாவும் கள்வர் தலைவனாகிய புல்லி என்பான் வாழும் வேங்கடத் தினின்றே வந்தன என்றும் அகப்பாடல்களால் அறியக் கிடக்கின்றன ஆகொள் மூதார்க் கள்வர் பெருமகன்; ஏவல் இளையர் தலைவன்; மேவார் அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடா தல்லிசைத் தென்னன். -அகம்-342 (ஆ-பசு அருங்குறும்பு-ஆரிய அரண்; படு-வந்து கூடும்; செரு-போர்; செல்-இடி, இசை-புகழ் தென்னன்-டாண்டியன்). வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர் பாண்டியர்.' -அகம்-27