பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 5g லுள்ள இடம் பார்க்க விழைவார்க்க அதிகக் கவர்ச்சியை ட்டும் என்பது நம் அநுபவமாகும். திருவேங்கடம்

  • 唸 من التي

பற்றித் தான் கேட்டவற்றால் மறையோனின் மனத்தில் அதிகக் கர்ைச்சியை எழுப்பியிருத்தல் கூடும். அத்தக் கவர்ச்சியின் காரணமாக அ ந் த ஊ ைர யு ம் அங்குள்ள மூர்த்தியையும் சற்று அதிகமாகவே அம்மறையோன் வருணித்திருத்தல் கூடும். மறையோன் மதுரைக்கு வழித்திறம் கூறும்பொழுதும் திருமால் குன்றத்தைக் குறிப்பிடுங்கால் தன் இறையன்பு மேலீட்

经 3- : , ఫీ شاه سه . .* .. - ها یا سینه : f پی: டால் கேட்போர் திறம் நோக்காது ஆங்குள்ள வியத்தகு செய்திகளையெல்லாம் விரித்தோதுவதனைக் காணலாம். இங்ங்னம் கூறுவது இறையன்புடையாரின் இயல்பு என்பதைத் தெரிவிக்கவே இளங்கோவடிகளும் அவன் பேசுமளவும் பேசவிடுகின்றனர் என்று கருதலாம். எனவே நேரில் கண்ட திருவரங்கத்தைக் குறைவாகவும் இன்னும் சென்று காணாத திருவேங்கடத்தை அதிகமாகவும் மறை யோன் வருணித்துள்ளான் என்பதை மட்டிலும் காரண மாகக் கொண்டு திருவேங்கடத்தைப் பற்றிய வருணனை இடைச் செருகல் என்று பிள்ளையவர்கள் கூறுவது சிறிதும் பொருந்தாது என்பது காய்தல் உவத்தல் இன்றி ஆராய்வார் மனத்தில் தோன்றும் கருத்தாகும்.

தவிர, இன்னோர் உண்மையையும் ஈண்டு அறி பாலது. சிலப்பதிகாரம் வரலாற்று அடிப்படையில் அமைந்த காவியமாயினும் அஃது ஒரு வரலாற்று நூல் அன்று. கண்ணகி வரலாற்றைச் சாத்தனார் மூலம் அறிந்த இளங்கோவடிகள், மேலும் அவளுடைய வரலாற்றைப் பலர் மூலம் நன்கு தெரிந்து தெளிந்து தம் கற்பனையையும் துணைக்கொண்டு காவியம் அமைத்த பொழுது எத்தனையோ செய்திகளைவிட்டும் இருக்கலாம். பல செய்திகளைக் கற்பனையால் சேர்த்துக்கொண்டும் இருக்கலாம். ஈண்டு நாம் காணும் இரண்டு இட வருண