பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 台? வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல்-திற்பென்று உளம்கோயில் உள்ளம் வைத்துள்ளினேன் வெள்ளத்து இளங்கோயில் கைவிடேல் என்று -இரண். திருவந்-54 (நிற்பு-உகந்து வாழும் இடம்; வெள்ளம்-திருப் பாற்கடல் 1. இதில் இளங்கோயில்’ என்பதற்கு முதற்கோயில் பழுது பார்க்கப்படுங்கால் அதிலுள்ள இறைவனின் திரு மேனியை எழுந்தருளச் செய்வதற்குத் தற்காலிகமாக அமைக்கப்பெறும் கோயில் என்னும் சரியான பொரு ளையே கூறுவர். இத்தகைய தற்காலிகக் கோயில் திரும லையில் கானப்பெறவில்லை என்று கூறும்போதுதான் தவறு நேரிடுகின்றது. இதனை ஈண்டுச் சற்று ஆய்ந்து அவர் காட்டும் சான்றுகளின் பொருத்தமின்மையைத் தெளிவாக புலப்படுத்துவேன். ஆய்வு: முதலில் அவர் கூறும் கருத்துகள் இன்ைைவ என்பதைத் தெளிவாக்க வேண்டும், முற்கருத்து: வேங்கடத்திற்கு 'இளங்கிரி' என்ற பெயர் பூதத்தாழ்வாரால் தரப் பெற்றது என்பது (முதற் பாடல் -இரண். திருவத்-53) இரண்டாவது கருத்து 'இளங்கோயில்’ என்ற இன்ன்ொரு கோயில் இருந்ததாகக் கருதி, அத்தகைய இரண்டாவது கோயில் திருமலையில் இல்லையே என்று கூறுவது (இரண்டாம் பாடல்-இரண். திருவந்-54.) முதற்பாசுரத்தின் பொருளை நோக்கும்போதே பூதத் தாழ்வார் மலையை இளங்கிரி என்று குறிப்பிடவில்லை