பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் உடைமை நீங்கிவிடும்' என்ற உண்மைகளை உணர்ந்தவர் பாண்மகள். அதனால் ஆடுகோட்பாட்டுச் சேரலாத்ன் குன்றனைய செல்வத்தைக் குவித்து வைத்திருக்கக் கூடும். ஆனால், காரிகையரின் கடைக்கண் வீச்சுக்கு அடிமையாகிக்கிடக்கும் இப்போது, கொடுக்கக் கொடுக்கக் குறையா. திருக்கத் துணை புரி யு ம் பொருளிட்டும் முயற்சியினைக் கைவிட்டிருக்கவும் கூடும். அது கைவிட்ட அவனை, அம். மாநிதியும் மெல்லமெல்லக் கைவிட்டிருக்கும். ஆகவே, அவன்பால் இப்போது வழங்குவதற்கு வளம் இருக்காது, வளம் இலா அவன்பால் செல்வது வீளும்’ என்ற எண்ண ஒட்டத்தின் விளைவால், பாண்மகள், நறவு நோக்கிச் செல்லும் நினைவினைக் கொண்டாள் அல்லன்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பொருள் ஈட்டும் முயற்சியில்லாதவன்; பொருளுக்கு வழிசெய்யும் போர்முயற்சியில்லாதவன் என எண்ணி விட்டதினலேயே, பாண்மகள், நறவுநோக்கி நடைபோடத் தயங்குகிருன் எ ன் ப ைத உணர்ந்து கொண்ட பாண் மகன் 'பாண் மகளே! நாட்டை நிறைவளம் உடையதாக ஆக்கிவிட்டதினாலேயே, ஆடுகோட் பாட்டான், பொருள் ஈட்டும் எண்ணத்தை மறந்து விட்டானல்லன்; மாருக நறவடைத்து நங்கையர நலம் துய்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும், அவனிடத்தும், அவன் நாற்படையிடத்தும் போர்பற்றிய சி ந் த னை ேய சிறப்பிடம் கொண்டிருக்கும். நாற்படைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் போர்க்களிறுகள், பகைப்படையைக் கொன்று குவிக்கும் போர்வெறியே கொண்டாருக்கும். நறவில் அவளுேடு சென்றிருக்கும் அவன் படைவீரர்கள், தங்கள் விற்களில் நாணேற்றியே வைத்திருப்பர்; அவன் நாற்படை மட்டுமன்று; அவன் நிலையும் அன்னதே; மங்கையரிடை கிடந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், அவன்

90

90