பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளார். அவன், அந்நாட்டுக் கடற்கரைக்கண் உள்ளதொரு பூம்பொழிலில் ஒய்வு கொண்டுள்ளான் எனக் கூறினர்; ஆங்கு விரைந்தார் புலவர்; ஆம், அப்பொழிலில், நெய்தல் மலர்களால் அணி செய்யப்பெற்ற அழகிய பந்தலில், அவன் அமர்ந்திருந்தான் அவன் முன் அழகிய விறலி ஒருத்தி ஆடலும், பாடலும் புரிந்து கொண்டிருந்தாள், சேரலாதன் தான்வந்ததையும் உணரமாட்டாநிலையில், தன்னை மறந்து, விறலியின் ஆடல்பாடல்களில் ஈர்ப்புண்டு கிடந்தான். அந்நிலையில் தாம் உணர்த்தவந்த உண்மையைத் தெற்றென உணர்த்த முனைந்தால், தன் அறிவுரை, தாம் கருதி வந்த பயனே அளிப்பதற்குப் பதிலாகத், தன்மீது அவன் சினம் கொள்ளவே துணைபுரியும் என்பதை உணர்ந்து, அது, அவன் உள்ளத்தள் புகுந்து உரியபயனை அளிக்கும் ஒர் உத்தியினை மேற்கொண்டார்.

ஆடுகோட்பாட்டுச்சேரலாதனை அணுகி, அவன் தாம் வந்திருப்பதை உணரச் செய்தார்; விறலியின் ஆடல் பாடல் களில் சென்றிருந்த அவன் நாட்டம், மெல்லத் தன்பால் திரும்பி இருப்பதை உணர்ந்த புலவர், அதுவே தருணம் என உணர்ந்து, "ஆடுகோட்பாட்டுச் சேரலாத! இப்பூம்பொழிலில் நெய்தல் மலர்களால் அணி செய்யப்பெற்ற இவ்வழகிய பந்தலில் அமர்ந்து, ஆடும் விறலியின் ஆடல் பாடல்களால் அகமகிழ்ந்திருப்பது, ஆண்டு முழுதும் போர் மேற்கொண்டு, பகைவர் கொண்டுசென்ற உன்நாட்டு ஆனிரைச் செல்வங்களை மீட்டுக் கொணர்ந்த உனக்குத் தேவைதான்;ஆனல், எனக்கோர் அச்சம்; இவ்வாறு, இங்கு நீ மகிழ்ந்திருக்கின்றன என்பதை அறியும் உன் பகைவர், "நீ மிகவும் மெல்லியன்; விறலியர்பால் ஈடுபாடு கொள்ளும் எளியன்; என எண்ணி விடுவாரோ? அவ்வெண்ண மேலிட்டால், இதுதான் தருணம், உன்னை வெற்றிகொள்ள எனக் கருதிப் படை

11