பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51."துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர, விளங்கிடும் புணரி உருமென முழங்கும் கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக் கூவல் துழந்த தடந்தாள் நாரை 5.குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும், வண்டு இறைகொண்ட தண்கடல் பரப்பின் அடும்புஅமல் அடைகரை அலவன் ஆடிய வடுஅடும் நுண்அயிர் ஊதை உஞற்றும் தூவிரும் போந்தப்பைபொழில்அணிப் பொலிதந்து, 10 இயலினள் ஒல்கினள் ஆடு மடமகள் வெறியுறு நுடக்கம்போலத் தோன்றிப், பெருமலை வயின்வயின் விலங்கும் அருமனி அரவழங்கும் பெரும் தெய்வத்து, வளைஞரலும் பனிப் பெளவத்துக் 15 குணகுட கடலோடு ஆயிடை மணந்த பந்தர் அந்தரம் வேய்ந்து - வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல், நனையுறு நறவின் நாகுடன் கமழச், சுடர்நுதல், மடநோக்கின், 20 வாள் நகை, இலங்கெயிற்று, அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர் பாடல்சான்று நீடினே உறைதலின் வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரே? 25 மழை தவழும் பெருங்குன்றத்துச், செயிருடைய அரவு எறிந்து கடுஞ்சினத்த மிடல் தபுக்கும் பெஞ்சினப் புயலேறு அளையை; தாங்குநர், 30 தடக்கையானத் தொடிக்கோடு துமிக்கும்

24

24