பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து,

10

15

  • 20

25

வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி, அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு, மைஅணிந்து எழுதரும் மாயிரும் பல்தோல், மெய்புதை அரணம் எண்ணுது, எஃகு சுமந்து முன்சமத்து எழுதரும் வண்கண் ஆடவர், தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட நல்லமர் கடந்த நின் செல்லுறழ் தடக்கை இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும்; இனியே, சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து முழாவிமீழ் துணங்கைக்குத் தழஉப் புனையாகச் சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன்றன ளாகி, உயவும் கோதை, ஊரலம் தித்தி, ஈரிதழ் மழைக்கண், பேரியல் அரிவை ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கம் சீறடிப் பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக், கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின் எறியர் ஒக்கிய சிறுசெங்குவளை ஈயென இரப்பவும் ஒல்லாள், நீ எமக்கு யாரையோ எனப் பெயர்வோள் கையதை கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ பாஅல் வல்லாயாயின; பாஅல் யாங்கு வல்லுதையோ? வாழ்க நின்கண்ணி!

அகலிரு விசும்பில் பகல்இடம் தரீஇயர்,

தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று

34

34