பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கில்லாத் தான்ை

ஆண்மை ஆற்றல்களில், அக்கால அரசர்கட்கெல்லாம் தலைமை வகிக்கும் தகுதிப்பாடு உடையவகை விளங்கினன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்; ஆனால், அப்பெருநிலையால் செருக்குற்று, போர்வெறி கொண்டு, அழிவுப்போர் புரிந்து அலைந்தான்ல்லன். காரணம் இன்றிக் களம்புகக் கருதான்். தனக்குக் கேடு விளக்கும் தகாநினைவு பிறர்பால் எழக்கண்ட வழியே, அவன் உள்ளம் அமர்மேற்செல்லும். அந்நிலை கண்ட பின்னர், அவளுல் அடங்கியிருப்பது ஆகாது. ஒருகால், சிறிதுகாலம் அடங்கியிருக்க அவன் நினைப்பினும், அச்செய்தி கேட்டுச் சிலநாழிகை அடங்கியிருப்பதும் அவன் நாற்படைக்கு இயலாது. அமைதி நிலவும் அவன்நாட்டு அரண்களில், அமைதிவாழ்வு மேற்கொண்டு அடங்கியிருக்கும் அவன்படை, அவன் நாட்டின்மீது ஆசைகொண்டு, அதைக் கைக்கொள்ளும் கருத்துடையராகி, அக்கருத்தினைத் தங்கள் நாற்படைக்கும், அப்படைத்தலைவர்க்கும் அறிவிப்பான் வேண்டிப் போர் முரசினை மு ழ க் கி ைர க, அதுகேட்டு, வாளும் வேலும் முதலாம் படைக்கலம் ஏந்தி வீரர் திரள, அவரை ஏவல் கொண்டவாறே படைவீரர் சூழவந்து எல்லைகடந்து உட் புகுந்து சேரலாதனின் எல்லைப்புறத்தில் பாசறை அமைத்துப் பாடிகொள்ளும் பகையரசர் நாற்படையில், முன் வரிசைக்கண் நிற்கும் வேழப்படையைக் கண்ணுற்ற அக்கணமே, எல்லை காக்க விரைந்துவிடும். அதுகாறும் அடங்கியிருந்த அப்படையை, அந்நிலை உண்டான பி ன் ன ரு ம் அடக்கி நிறுத்துவது இயலாது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனே வந்து, சிறிது பெறுங்கள் எனக் கூறி நிறுத்திலுைம், அது நில்லாது, தங்கள்நாட்டு மண்மீது ஆசைகொண்டு வந்த

49

49