பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

189


“மன்னிப்பு எதற்கு? அரசகுமாரர்களுக்கும் அந்தணர்குலக் கொழுந்துகளுக்கும் மட்டும் குருகுல வாசம் என்பது சட்டமில்லையே? இந்த வன சமூகத்தில் எல்லாரும் சமம், சொல்லப்போனால் இந்த வன சமூகம்தான், அரசகுலங்களையும் அந்தண குலங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் மன்னர், எங்களுக்குப்பிச்சை போடுவது போன்று இந்தத் தானிய மூட்டைகளை அனுப்புவது எங்கள் தன் மானத்தைக் குத்துவதுபோல் இருக்கிறது. எனவே, இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம் கச்சலரே?”

“அபசாரம், அபசாரம்: வனதேவியின் மனம் வருந்தும்படி, நான் எதுவும் பேசவில்லையே? வனதேவி, நீங்கள் வழங்குகிறீர்கள்: இந்தக் கொடைக்கு நன்றியாகச் சிறு காணிக்கை போல் இவை. வனதேவி இங்கே வந்தபிறகு, இந்த வனமே எப்படி மாறிவிட்டது? எனக்குத் தெரிந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், இங்கே பஞ்சமில்லை; ஆற்று வெள்ளமில்லை; காட்டுத் தீ இல்லை; சூறைக்காற்று இல்லை. அதது, அததன் தருமப்படி இயங்கும் ஒழுங்கில் உலகம் தழைக்கிறது. அவன் பணிந்து விடை பெறும் வரை அவள் பேசவில்லை. இவர்கள் சென்ற பிறகு, பெரியன்னையின் நா வாளாவிருக்காது, தானே செய்தி வெளிவரும் என்று பூமகள் எதிர்பார்க்கிறாள்.

வேடுவப் பெண்கள் கொட்டைகளை உடைத்துப் பருப்பு களைத் தனியாகக் கொண்டு குடிலுக்குள் வைக்கிறார்கள். பிறகு தோடுகளை ஒரு பக்கம் குவிக்கிறார்கள். பொழுது சாய்கிறது.

பெரியன்னை இப்போதெல்லாம் மிகச் சிறிதளவே உணவு கொள்கிறாள். ஒரே நேரம்தான்.

இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள். நூல் நூற்பதோ, திரிப்பதே செய்ய இயலவில்லை. ஆனால் தடாகக் கரையில் சென்று, நீரை முகர்ந்து ஊற்றிக் கொள்வது மட்டும் குறையவில்லை. முகம் சுருங்கி, உடல் சுருங்கி, குறுகி, முன் முடி

வழுக்ை கயாகி.

இவள் பிறப்பு, வளர்ப்பு எப்படியோ?