பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

89

முதியவளான கணிக்ை பத்மினி, தன் நடுங்கும் குரலில்


          “சீர்மேவும் கோசலத்தின் நாயகனின்
          தோள் தழுவும் தூமணியே!
          பார்புகழும் மாமன்னன், பார்த்திபன் தன்
          கண்மணியே...”

என்று பாடி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுகிறாள்.

ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்ற மந்திரம் ஒன்று உள்ளே மெள்ள ஒலிக்கிறது.

வாசவி சமையற்கட்டிலிருந்து அகன்ற பாண்டத்தில் வெதுவெதுப்பான நீர் கொண்டு வருகிறாள்.

தாழ்வரையில் கால்களை முற்றத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்த பூமகளின் பாதங்களில் சாமளி வரைந்த மயில் சிரிக்கிறது. அவந்திகா, கால்களைக் கழுவ வந்தவள் சற்றே நிற்கிறாள்.

“இத்துணை அழகுக் கலையை மன்னர் பார்த்து மகிழவேண்டாமா? இந்தத் திருப்பாதங்களில், பொன்னின் சரங்களும், வண்ணச்சித்திரங்களும், மன்னரல்லவோ கண்டு மகிழ வேண்டும்?”

வாசவி வாளாவிருக்கிறாள். “சாமளி எங்கே?... அவளை அனுப்பி, மகாராணி அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லலாமா?”

வாசவி விருட்டென்று உள்ளே செல்கிறாள்.

உள்ளிலிருந்து, ராதையின் ஐந்து பிராயச் சிறுமி கண்டி

அழுத முகத்துடன் வந்து மகாராணியின் முன் அழுதுகொண்டே பணிகிறது.

பூமகள் பதறிப் போகிறாள். சிறுமி விம்மி விம்மி அழுகையில் பூமகள் அக் குழந்தையைத் துக்கிக் கண்களைத் துடைக்கிறாள்.