பக்கம்:வரதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலி வேடம் 11 அப்போது வரதன், நடுக்கத்தோடு சிறிது கையை நீட்டி மறுபடியும் இழுத்துக் கொண்டான். அதனுல் அவ்வடியானது அந்த ஆசிரியர் துடையில் கன்ருக விழுங் தது. உடனே அந்தத் தலைமை ஆசிரியர் மிகுதியும் கோபங்கொண்டு அவன் கைகளுள் ஒன்றைப் பிடித்துக் கொண்டு முதுகின் புறமாக ஓங்கி இரண்டு அடி கொடுத்து மூன்ருவது அடிக்காகப் பிரம்டை ஓங்கினர். அவ்வடியினைப் பொறுக்காத வரதன் பிரம்பினைப் பிடித்துக் கொண்டான். அதனல், அவர் மேலும் கோபங்கொண்டு, அவனுக்குப் பளிர்-பளிர் என்று பல இடங்களில் நான்கைந்து அடிகள் கொடுத்து அவனை விசுப்பலகையின் மீதும் நிற்கவைத்தார். அதனால் வரதனுக்குக் கையில், இரண்டிடங்களில் தழும்பேறின. வரதன் அதனைப் பார்த்துப் பார்த்து அழுதவண்ணம் இருந்தான். ஆசிரியரும். அதனை உண்ர்ந்து, தம் மனத்திற்குள் சிறிது வருந்தினர் : பிறகு முருகனையும் சிறிது கடிந்து அவனையும் நிற்கவைத் தார். முடிவில், வரதனிடம் சென்று அவனுக்குத் தேறு தல் பல சொல்லி அவன் அழுகையை நிறுத்தி, இருவரை யும் உட்கார வைத்தார். 3. புலிவேடம் வரதனும் முருகனும் இணை பிரியாத் தோழர்கள். எனினும், வரதன் முருகனிடம் அடிக்கடி விளையாட் டாகப் பல பேசுவதுண்டு. அதனல், சில சமயங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/18&oldid=891106" இலிருந்து மீள்விக்கப்பட்டது