பக்கம்:வரதன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| UW வரதன் தான். பின்னர், இரண்டொரு வீடுகளைக் கடந்து சென்று ஒரு செல்வரின் வீட்டை அடைந்து அங்கே புலிபோல் விளையாடினன். அவன் சீடர்களும், கோல் கத்தி முதலியவைகளால் பல அரிய வேலைகள் செய்து காட்டினர். அந்தச் செல்வர் அவனுக்குப் பட்டாடை யும், ஒரு பொற்பதக்கமும் பரிசிலாகத் தந்தார். 4. கரிவேடம் ஆட்டம் முடிந்தது. ஆதலின் அங்குள்ள கூட்டமும் சிறிது சிறிதாகக் கலையலாயிற்று. புலிவேடக்காரன் வேறு பல இடங்களுக்குச் செல்ல எண்ணினன். வரத னுக்கு அப்போதுதான் பாடசாலையின் நினைவு வந்தது. 'ஆ நான் முற்றிலும் மறந்தே போனேனே பாட சாலைக்குச் செல்லவேண்டுமே ! எனத் தனக்குள் எண் னிக்கொண்டே அவன் அக் கூட்டத்திலிருந்து விலகி உடனே வெளியே வந்தான். வரதன் பராக்குப் பார்த்த இடம் நீண்டு அகன்ற ஒரு பெரிய தெரு, அவன் அந்தத் தெருவுக்கு என்றும் வந்ததே யில்லை. அதலால், அங்கிருந்து வீட்டிற்குப் போகும் வழி அவனுக்குச் சிறிதும் தெரியவராது. புலி வேடத்தின் மீதிருந்த ஆவலால் வரதன் வரும்போது, வழியினைக் குறித்து யாதும் எண்ணிலன். ஆதலால், பாடசாலைக்குச் செல்லக் கருதிய அவன் வழியறியாது. விழிக்கலாயினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/23&oldid=891117" இலிருந்து மீள்விக்கப்பட்டது