பக்கம்:வரதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ግ0 வரதன் அதற்கு அப்பெரியவர், 'ஐயா தெரிகின்றதா? இது தான் பிள்ளைகளைப் பெற்று நாம் அடைகின்ற சுகம் ! என்ருர். உடனே அங்கிருந்த எதிர்விட்டுக்காரர். அவர்களைப் பார்த்து, ஐயா, நீங்கள் இருவரும் இங்கே இருந்தீர் களே பிறகு திடீரென்று எங்கே சென்றீர்கள்? வரதனே எவ்விதம் கண்டுபிடித்தீர்கள் ? என்று கேட்டார். அதற்கு அப்பெரியவர், நாங்களா கண்டுபிடித் தோம் ? இந்தச் சுந்தரனும் இவ்வுபாத்தியாயருமே கண்டு பிடித்தார்கள். நாங்கள் இருவரும் இன்று அதிகாலையில் புறப்பட்டுத் தெருத் தெருவாய்ச் சுற்றி யலைந்தோம். வரதன் அகப்படவே இல்லை. ஆதலால் காங்கள், அவ னேக் குறித்தே ஏதேதோ பேசிக்கொண்டே வடமேற் காக நீள கடந்து சென்ருேம். இவ்விதம் நாங்கள், வியாசர்பாடிக்கு அருகே செல்லும்போது எங்களுக்கு எதிராக ஒரு வண்டி வேகமாக வந்துகொண்டிருந்தது. முதலில், நாங்கள் அதனைக் கவனியாமலேயே சென்று கொண்டிருந்தோம். ஆனால், அந்த வண்டி எங்களுக்கு அருகே வந்ததும் நின்றுவிட்டது. பிறகு, சுந்தரனின் குரல் எங்களுக்குக் கேட்டது. அதனல் காங்கள் அந்த வண்டியை அடைந்தோம். அங்கே சுந்தரனையும், வரதனை யும், நம் உபாத்தியாயரையும் கண்டோம் என்ருர். அப்போது அவ்வீட்டுக்காரர், ஒlஅப்படியாl-தம்பி சுந்தரம், நீங்கள் எவ்வாறு வரதனைக்க ண்டுபிடித்தீர்கள்? என்று ஆவலுடன் வினவினர். அதற்குச் சுந்தரன், அதுவும் தெய்வச் செயல் என்றுதான் சொல்லவேண்டும். நானும் ஆசிரியரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/77&oldid=891228" இலிருந்து மீள்விக்கப்பட்டது