பக்கம்:வரதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வரதன்

வரதன் எவ்விதமேனும் பீ. ஏ., எம். ஏ., பட்டம் டெ

W.

றுப்பெரிய பதவியில் அமரவேண்டுமென அவர் எட்டே

தும் கடவுளை வேண்டிவருவார்.

வரதனுக்கு வயது ஏழே இருக்கும். அவன், தன் விட்டிற்குச் சிறிது துாரத்தில் உள்ள ஒரு சிறு பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்து வந்தான்்். வரதன், வீட்டில் இருப்பதைவிடப் பள்ளிக்குச் செல்வதையே சிறந்ததாக எண்ணினுன். ஏனென்றால், அவன் தந்தை அவனைச் சிறிதும் விளையாட விடமாட்டார். தம் மகன் எந்நேரமும் புத்தகமுங் கையுமாகவே இருக்க அவர் விரும்புவார்.

வரதன் சுவடியிலிருந்து எதையுங் கற்க விரும்ப வில்லை ; தான்்் அறிந்துகொள்ள வேண்டுவன யாவும் தெருவிலும், தோட்டங்களிலும், மற்று முள்ள இடங் களிலுமே இருப்பதாக அவன் எண்ணினான் ஆனால், தன் தந்தையின் கோபத்திற்கு அஞ்சி அவன், விடுமுறை நாட்களில்கூட வெளியே காலெடுத்து வைப்பதில்லை.

வரதன் காலேயில் எழுந்து புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு மூலையில் அமர்வான். அவன், தனக்கு நன்ருகத் தெரிந்த பழைய பாடங்களே உரத்த குரலெடுத்து இசை கூட்டி வாசிப்பான் பின்னர்ப் புதிய பாடங்களைச் சிறிது நேரம் மொன-மொன வென்று மனத்திற்குள் பிழைபடக் குளறி வழிவான் முடிவில் புத்தகத்தால் முகத்தை ஒரு புறமாக மறைத்துக்கொண்டு பராக்குட் பார்க்க விரும்புவான். தன் தலையைச் சாய்த் துப் பார்க்கும் காகத்தைக் கண்டு அவன் சிறிது நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/8&oldid=629657" இலிருந்து மீள்விக்கப்பட்டது