பக்கம்:வரதன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதனைக் கண்டறிந்த வரலாறு ግ8 வல்ல' என்ருன். பிறகு நம் ஆ சி ரி ய ர், 'ஐயா, அதர் சிறுவளுேடு போன பிள்ளையாண்டானுக்கு வன்ன வயதிருக்கும்?' என்ருர். அதற்கு அக்கிழவன், 'அது எனக்குத் தெரியாது. இதோ உங்கள் பக்கத்தில் இருக்கின்ருரே ஐயா-அவரைவிடக் கொஞ்சம் பெரியவ ாக இருக்கலாம் என்ருன் , பிறகு, நம் ஆசிரியர் பறிது நேரம் ஏதோ யோசித்து முடிவில் என்னைப் பார்த்து, சுந்தரம், அந்தச் சிறுவன் வரதனுகத்தான் இருக்கவேண்டும் , அந்த வழியே போய்ப் பார்க்கலாம் வா’ என்ருர், 'ஆதலால் நாங்கள் இருவரும் மிக வேகமாக வட மேற்குத் திசை நோக்கிச் சென்ருேம். காங்கள் இவ்வி தம் சிறிது தூரம் சென்றதும் வியாசர்பாடியை அடைக் தோம். அப்போது இரவு மணி, பன்னிரண்டு அடிக்கும் சமயம் ஆதலால், அங்கே எல்லா வீடுகளும் அடைபட் டிருந்தன. நாங்கள் இருவரும் இன்னது செய்வதென்று தோன்ருமல் சிறிது நேரம் திகைத்துப் பின்னர், அங் குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினுேம் . கெடுநேரஞ் சென்ற பின்னர், ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். நாங்கள் அவரிடம் வரதன் விஷயத்தைக் கூறியதும் அவர் முணுமுணுத்துக் கொண்டு, அது என்னமோ எனக்குத் தெரியாதுஇங்கே ஒருவரும் வரவில்லை’ என்று சொல்லிக் கொண்டே கதவைத் தாளிட்டுக் கொண்டு சென்று விட்டார். 'பின்னர், நாங்கள் இரண்டு மூன்று வீடுகள் தாண் டிச் சென்ருேம். அங்கே ஒரு பெரியவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டு வெளியே உலாவிக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/80&oldid=891234" இலிருந்து மீள்விக்கப்பட்டது