பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடமொழி-ஆரியம்-சமஸ்கிருதம்

99


ஆரியராயினர். இவர் சமஸ்கிருதம் பயின்றவரின் வேறு என்றும், அவருள் அறிவர், தாபதர் போன்ற பிரிவுகள் உள வென்றும், இலக்கணத்தால் அறிகிறோம். எனவே அரிய என்ற சொல்லில் இருந்து ஆரியம் என்ற சொல் பிறந்து, பண்பால் உயர்ந்த குணத்தால் சிறந்த உயர்ந்த பெரியோரையும், அழகையும், பிற உடலுக்கும் உயிருக்கும் நலம் தரும் பொருள்களையும் குறித்தது எனலாம். ஒருவேளை வடவாரியர் தென்னாட்டுக்கு வந்தபோது இரு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி விட்டார்களோ என்று கொள்ள இடம் உண்டாகிறது. எனவே தமிழில் வழங்கும் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் தமிழில் உள்ள அரிய’ என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றி உயர்ந்தவரையும் உயர்பொருளையும் குறிப்பன என்று கொள்ளல் வேண்டும். தமிழில் தொல்காப்பியர் காலமுதற் கொண்டே - ஏன் - அதற்குமுன் இருந்துங்கூட அறிவர். தாபதர் போன்ற நல் உணர்வாளர் இருந்தார்கள் என அறிகிறோம். அவர்கள் பொன்னே கொடுத்தும் புணர்வதற்கு அரியராய் இருந்ததோடு அவ்வப்போதுமக்களுக்கு அறம் உணர்த்தும் ஒழுக்க சீலராய் விளங்கினார்கள் எனவும் காண்கிறோம். அவர்கள் வாழ்வு சற்றுத் தனிப்பட்ட முறையில் அமைந்து, தனி இடத்திலிருந்து எண்ணும் பண்பாட்டில் தலைசிறந்ததாக விளங்கியிருக்கும் என்பதைத் தொல்காப்பியம் முதலிய வற்றால் அறிகின்றோம். எனவே தமிழ் நாட்டு அரியராகிய அறிவரே ஆரியர்’ எனப்பட்டார் என்பது பொருந்தும். இந்த ஆரியர் மிகப் பழங்காலந்தொட்டு, வடநாட்டு ஆரியர் சிந்துவெளிக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - தமிழ் நாட்டிலும் தமிழ வழங்கிய பரந்த இந்தியப் பெருநிலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.

இனி, பின் இந்தியநாட்டுக்கு வாழ்வு வேண்டி வந்தவர்களாகிய ஒர் இனத்தாரும் தம்மை ஆரியரென்று கூறிக் கொண்டிருப்பதில் தவறில்லை. அவர்கள் எதனால் அப் பெயரிட்டு அழைத்துக்கொண்டார்கள் என்பதை இன்று