பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வரலாற்றுக்கு முன்


நம்மால் காண இயலாது. எனினும் அவர்களைத் தமிழர்கள் பிரித்தே, வட வாரியர்’ எனவே வழங்கி வந்தார்கள், என்பதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இன்று இந்தியர் என்று பெயரிலே இரு நாடுகளில் ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் தொடர்பில்லாத இரு நாடுகளில் - வாழ்பவரை உலகம் குறிப்பதைக் காண்கின்றோம். எனினும் அமெரிக்க நாட்டை ஒட்டி வாழ்பவர்களைச் செவ்விந்தியர்’ எனப் பிரித்திருப்பதையும் காண்கிறோம். இது போன்றே தமிழ் நாட்டு அரியராக வாழ்ந்த ஆரியரும் வடவாரியரும் பெயரளவில் ஒன்றுபட்டாலும் பிற அனைத்திலும் வேறுபட்டவராவார்கள். அந்த வடவாரியர் மொழியை அவர்கள் வேண்டுமாயின் ஆரியம் எனக் கொள்ளலாம். எனினும் நான் மேலே காட்டியபடி அவர்களே தம் சமஸ்கிருதத்துக்கு ஆரிய மொழி என்று பெயரிட்டதாகக் காண முடியவில்லை. எனவே தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வடமொழி, ஆரியம் என்பன இன்றைய ‘சமஸ்கிருதத்'தினும் வேறுபட்டவை என்பதும், வடமொழி தமிழ்நாட்டு எல்லையில் வடக்கே-பக்கத்திலேயே வழங்கியதாக இருக்கவேண்டும் என்பதும் ஆரியம் தமிழ்நாட்டிலேயே ஒழுக்க நெறியில் உயர்ந்த அரியர் வழங்கிய குழுக்குறி மொழியாகவோ அன்றி வேறு வகையாகவோ இருக்க வேண்டும் என்பதும், இம் மொழியையும் பின் வடக்கிலிருந்து வந்த சமஸ்கிருதத்தையும் ஆரிய மொழி என்ற பெயரால் ஒற்றுமைப்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் அழகின் அடியாகப் பிறந்த ‘முருகு’ என்னும் முருகனையும் புராணக் கடவுளாகிய கந்தனையும் ஒருவராக்கி வழிபடும் வரலாறு நாடறிந்ததே. இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு ஆராய்ந்து வரலாறு, மொழி, கலை ஆகியவைபற்றி ஆராயும் வல்லவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமைகின்றேன்.