பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெற்றிக்கண்


பஃறுளி ஆற்று பழய லெமூரியனை
கல்தோன்றி மண்ணும் தோன்று முன்னே
பிறந்ததொரு பழங்குடி என்று சொன்னார்
இமயத்தைக் கல்லென்றும் இந்து வெளியை மண்என்றும்
சொல்லுவது நம் இலக்கிய மரபு
பண்ணுறத் தமிழாய்ந்த அந்த பழய மகன்
கண்ணுதலில் பெற்றிருந்த கதையுமுண்டு
முன்னை லெமூரியன் கொண்டிருந்த உடலமைப்பில்
இருபுருவத்துக்கும் இடையில் சிறிது மேடாக
வாதுமை வடிவில் புடைத்தெழுந்த நுண் நரம்பு
அகத்துக்கண் ஆனது நெற்றிக்கண் என்றார்
ஐந்து பெரிய அறிவும் தாண்டி
ஆறாவது ஆன மனத்துக்கும் மேலாக
ஒளிகொண்டு ஞானக் கண்ணாக செயற்பட்டது
அ.இ. என்னும் புறச்சுட்டு இரண்டும்
அருகிலும் தொலைவிலும் உள்ளதை அறிவுறுத்தும்
'உ' என்னும் அகச்சுட்டு கண்கொண்டு காணாததை
மனத்துக் கண் கொண்டு காண்பதையும் சுட்டும்
அவ்வாறு தொழிற்பட்ட நெற்றிமேடே நெற்றிக்கண்
புறத்திரண்டு கண்ணோடும் நெற்றிமேட்டை
மூன்றாவதாக எண்ணினார் முக்கண் என்றார்
முன்னை இவரின் பழந்தெய் வங்களூக்கு
முகங்கள் எத்துணை வைத்தாலும்
மூன்று கண்ணும் வைத்தார்.

10