பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோடையும் மழையும் குளிரும் பனியும்
மாறிவரும் பருவமும் வேறுபடும்
செங்கதிரை வலமாக சுற்றுகின்ற
நிலமகளும் தடம்புரளும் நிலைமையினால்
அலை கடலும் இடம் பெயரும் பிரளயம் என்பார்
இந்தப் பெரிய இயற்கைக்கும் மேலாக
வானத்து கொள்ளி ஒன்று வீழ்ந்தது பூமியிலே
ஆஸ்திரேலிய பெருந்தீவு ஆயிற்று
அந்தப் பேர் அதிர்ச்சிக்கு ஆளானது லெமூரியா
மலை தகர்ந்தது கடலலை சூழ்ந்தது
நெடு நிலம் பெயர்ந்து சிறுசிறு தீவானது.
ஆக லெமூரியப் பெருநிலம் சிதறுண்டு
மாய்ந்தது போக மீந்ததே குமரிக்கண்டம்
சாத்திரக்காரர் சரித்திரக்காரர் கணக்குப்படி
மூன்றாவது ஊழி முடிந்தது முடிந்தது
வானத்துக் கொள்ளி வந்து வீழ்ந்த வரலாற்றை
மேற்புலத்தார் லோத்தின் நாளில் ஒரு கொடிய
நெருப்பு மழை பொழிந்து உலகை எரித்ததென்றார்
தென்புலத்தில் அன்றிருந்த மன்னவனே ஆதிமனு
சத்திய விரதனென்று சாற்றுவதும் அவனையே
வைகைக் கரையில் தவமிருந்து அரசிருந்தான்
வைகையைக் கிருதமாலை என்று வந்தவர் சொன்னார்
மீன்வடிவில் ஒருதோணி கொண்டு
பெரிய வெள்ளத்துக்குப் பிழைத்துச் சென்றதால்
மீனவன் என்றும் அவனைச் சொன்னார்

13