பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்த மனுவுக்கு ஒரு மகனிருந்தான்
அவன்பேர் இயமன் மகளிருந்தாள் அவள் பேர்-இழை
இயற்கையின் சீற்றத்தில் இழந்தபகுதி
இயமன் பங்கு ஆதலின்
அழிவுக்கும் சாவுக்கும் அவன்பேர் ஆனான்
எஞ்சியபங்கு இழையின் பங்கு
குமரிக்கு உரியதால் குமரிக்கண்டம் என்றார்
பெண்வழியே மண்ணுரிமை கொண்டது அவள் மரபு
தாயாதி தாயபாகம் என்ற வழக்காறும்
மருமக்கள் தாயமென்ற வழிமுறையும்
இழையின் பேரால் ஏற்பட்டது
குமரிஆற்று நாகரிகச் சுவடு அதுவே
குமரியாறும் கோடும் அழிந்தபின்
கொல்லங் கரைக்கு குடிபெயர்ந்தார் ஆயினும்
மருமக்கள் தாயத்தை மறக்கவில்லை
அதங்கோட்டு அரசரும் கொச்சிக் கோமக்களும்
கொண்டிருந்த வழிமுறை உரிமை அதுவே.

14